Monday, August 27, 2018

பிரெஞ்சு புரட்சியின் தாக்கம்

பிரெஞ்சு புரட்சியின் தாக்கம்
-------------------
பிரான்ஸை இறுதியாக ஆண்ட போர்பன் மன்னர் பதினாறாம் லூயியும், அவரின் ஆங்கில வம்சத்தில் வந்த ராணி மேரி அண்டாய்னட்டும் செய்த கொடுமைகள் மக்களால் பொறுக்க முடியாமல் போயின. 1789 ஜூலை மாதம் ஒரு மாலை சனிக்கிழமை அன்று அந்த மன்னரும், ராணியும் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் பாரீஸ் நகர வீதிகளில் வலம் வந்தனர். எங்கும் மக்கள் திரள் கூட்டம். மக்கள் அரசரையும், அரசியையும் பார்த்து சாப்பிடுவதற்கு ரொட்டித் துண்டே இல்லாமல் உயிர் போகும் நிலையில் இருக்கின்றோம் என்று கடுமையான, உரத்தக் குரலில் முறையிட்டனர். பதினாறாம் லூயி அதற்கு பதில் சொல்ல போகும்போது மேரி அண்டாய்னட் அவரைத் தடுத்து ரொட்டி இல்லையெனில் வெண்ணையாவது, கேக்கையாவது சாப்பிடுங்கள் என்று திமிரில் வார்த்தைகளை கிண்டலாக சொன்னார்.
இதை பொறுக்க முடியாத மக்கள் சக்தி மன்னரையும், ராணியையும் வீதி வீதியாக விரட்டினர். ரணமில்லாமல் கொல்லும், கில்லட்டின் ஆயுதத்தினால் இவ்விருவரும் சாகடிக்கப்பட்டனர். இந்த திமிர்பிடித்த பெண்மை குணமில்லாத ராணியை நாவலாசிரியர் கார்லைல், மேரி அண்டாய்னட் பிறப்பிலும் ஜீவிதத்திலும் (Biological Error) ஒரு தவறான மனுஷி என்றும், அரசரை இயற்கையின் பிழை (Mistake of Nature) என்றும் கூறுகிறார்.
இப்படித்தான் எழுந்தது பிரெஞ்சு புரட்சி. ஏன் பிரெஞ்சு மட்டுமல்ல, ஐரோப்பா கண்டத்தையே இந்த புரட்சி திருப்பிப் போட்டது. உரிமைகளை நிலைநாட்ட ஒரு உந்து சக்தியாக பிரெஞ்சு புரட்சி வரலாற்றில் அமைந்தது. இதன் எழுச்சி அதே காலக்கட்டத்தில் 1789இல் அமெரிக்காவும் குடியரசு நாடாக மக்களின் உரிமைகளை காக்க தன்னுடைய அரசியல் சாசனத்தை தங்களுக்கு தாங்களே அர்ப்பணித்துக் கொண்டனர்.

#பிரெஞ்சு_புரட்சி
#உலக_அரசியல்
#அமெரிக்க_சுதந்திரப்போர்
#French_Revolution
#American_war_of_Independence
#International_relations
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-08-2018


No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...