Thursday, August 30, 2018

விதைகள்,வேர்களை;அடிக்கற்களை அறிவார் யாரோ...



————————————————-

வளர்ந்து விரிந்த விருட்சத்துக்கு மூலமான அளவில் சிறிய விதையின் கீர்த்தி,அதை தாங்கி பிடிக்கும் வேர்களை யாருக்கும் தெரிவதில்லை. அது போலவே, வானுயர்ந்த கட்டிடங்களைத் தாங்கி நிற்கும் அடிக்கற்களும் கண்ணில்படுவதில்லை.
மகத்தான சாதனைகளை செய்த ஒருவரை பாராட்டுவார்கள். அந்த சாதனையை சாதித்தவர் என்று கொண்டாடுவார்கள். ஆனால் அந்த சாதனையை முடித்து தந்த காரணகர்த்தாக்களை யாரும் கொண்டாடுவதில்லை.
இது தான் யதார்த்தம்!...

மனசாட்சிக்குத் தெரியும். விருட்சத்துக்கு விதை ஆளுமை. வானுயர்ந்த கட்டிடங்களுக்கு தெரியும், தன்னை தாங்கிப் பிடிப்பது அடிக்கற்கள் என்று. அஃறிணைக்கே தெரியும்போது, உயர்திணையில் உள்ள மானிடத்தில் ஒரு சாதனையை செய்தவரை பாராட்டுகிறார்கள், அந்த சாதனையை செய்து முடிக்க மூலமாக இருந்தவர்களை கண்டு கொள்வதில்லை. இங்கிருந்து தான் போலித்தனங்களே துவங்குகின்றது. குழுப்பணிகளின் வெற்றிகளை யாரும் சிந்திப்பதேயில்லை. எப்படி சாதித்தார்?, யாரால் சாதித்தார்? யாரால் அந்த வெற்றி அவர் கைககளில் சேர்ந்தது என்பதையெல்லாம் யாரும் நினைப்பதில்லை. 

இலையில் பண்டம் இருந்தால் சாப்பிடும்போது, அந்த பண்டத்தில் உள்ள மூலப்பொருட்களை பற்றி சிந்திக்க மறுக்கும் மனமில்லாத மானிடம்.

#மானிடம்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-08-2018.
(வாரணாசி )

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...