Wednesday, August 22, 2018

//தாகங்கொண்ட மீனொன்று// - ரூமி

என்னை
மிகவும் வசமிழக்கச்
செய்கிறாய்
நீ

உனது அருகின்மை
எனது காதலைப்
பொங்கிப் பெருகச் செய்கிறது.
எப்படியென்று கேட்காதே.

பிறகு நீ
எனதருகே வருகிறாய்.
'வேண்டாமே..'
என்கிறேன் நான்.
அதற்கு நீயோ
'வேண்டாமா..'
என வினவுகிறாய்.

ஏனோ இது
என்னைக் களிப்படையச் செய்கிறது.
ஏனென்று கேட்காதே.
   
 
//தாகங்கொண்ட மீனொன்று//
- ரூமி

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...