Thursday, April 2, 2026

ஆனால் எதோ நிகழ்ந்திருக்க வேண்டும். தன்மானம் அடிபட்டுத் துடித்திருக்கலாம் .துயரம் விரக்தியாய் இறுகிப் போயிருக்கலாம்

 ஆனால் எதோ நிகழ்ந்திருக்க வேண்டும். தன்மானம் அடிபட்டுத் துடித்திருக்கலாம் .துயரம் விரக்தியாய் இறுகிப் போயிருக்கலாம்.அன்பு அறவே செத்திருக்கலாம்.அது எதுவானாலும் அதன் காரணமாய் அவன் தன் வாழ்வின் சுகத்திற்கும் கஷ்டத்திற்குமிடையே தேர்ந்தெடுக்கும் ஒரு தருணம் வந்த போது அவன் கஷ்டத்தைத் தேர்ந்தெடுத்தான்..

தன் மனதுக்கு சரி என்று தோன்றியதற்கேற்ப முடிவெடுத்து அவன் தானாக தேர்ந்தெடுத்துக் கொண்டது அவனுடைய அவல வாழ்வு..எனவே அது,பரிதாபத்திற்குரியதல்ல. மரியாதைக்குரியது. கம்பீரம் கொண்டது..

No comments:

Post a Comment

FEB 7