Thursday, April 2, 2026

தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே #தென்பெண்ணையாறு

 தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே #தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாற்று நீரை தமிழ்நாட்டிலுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுடன் அதன் அருகிலுள்ள மாவட்டங்களிலும் விவசாயத்திற்கு நம்பி உள்ளனர். இந்த நிலையில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக மத்திய அரசை எதிர்த்தும், கர்நாடக அரசை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 2018 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், "1892 மற்றும் 1933 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை அல்லது தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை. அணை அல்லது தடுப்பணை கட்டினால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறைந்து தமிழக விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை உருவாக்கும். #penaru



No comments:

Post a Comment

FEB 7