தமிழகத்தின் திருமகள் திருமதி நிர்மலா சீதாராமன் - இவர் நடுத்தர வர்க்கத்தினருக்கான நிதி அமைச்சர். நடுத்தர வர்க்கத்தினருக்கு இவர் அளித்த சலுகைகளைப் போல இதுவரை எந்த ஒரு நிதி அமைச்சரும் சலுகைகள் வழங்கியது இல்லை.
1. தனிநபர் வருமான வரி: காங்கிரஸ் காலத்தில் ஒரு சமயத்தில் 98% வருமான வரி விதிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று இந்தியாவில் 98 சதவீத மக்கள் வருமான வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றால் அதற்கு காரணம் நிர்மலா சீதாராமன் அவர்கள் தான். 2. மறைமுக வரி: காங்கிரஸ் திமுக காலத்து மறைமுக வரியை கிட்டத்தட்ட பாதியாக குறைத்து, நடுத்தர வர்கத்தினரின் வரி செலவை வெகுவாக குறைத்து மாபெரும் சேமிப்பை ஏற்படுத்தித் தந்தவர் நிர்மலா சீதாராமன் அவர்கள். 3. சிறு குரு தொழில் முனைவோர்களுக்காக 54 கோடி முத்ரா வங்கி கடன் வழங்கி நடுத்தர வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் கிடைக்கச் செய்தவர் நம் நிர்மலா சீதாராமன் 4. நடுத்தர வர்கத்தினரின் சேமிப்பு பொதுத்துறை வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் திமுக காலத்தில் அரசியலில் நேர்மையற்ற தன்மை காரணமாக பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து அவை நஷ்டத்தில் இயங்கின. மூழ்கும் நிலையில் இருந்த பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுத்து தேசத்தை விட்டு ஓடிய வங்கிக் கடன்காரர்களிடம் இருந்து அனைத்து கடன்களையும் வசூலித்து வங்கிகளின் நிதி நிலையை வலுப்படுத்திய பெருமை நிர்மலா நிர்மலா சீதாராமன் அவர்களையே சாரும். வரலாறு காணாத அளவில் பொதுத்துறை வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன; வரலாறு காணாத வகையில் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் குறைந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் நம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தான். 5. படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வேண்டுமென்றால் இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகமாக வளர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக பட்ஜெட்டில் பல லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கிய பெருமை நிதியமைச்சரையே சாரும். (இந்த ஆண்டு உள்கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக 12 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது) 6. பத்தாவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் இன்று உலகிலேயே நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. உலகப் பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் இன்ஜின் என்று உலக வங்கி ஐ எம் எப் போன்ற அமைப்புகள் இந்தியாவைப் புகழ்கின்றன. இந்த வளர்ச்சிக்கு நிதி அமைச்சரின் பங்கு அபாரமானது. 7. புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏற்ப பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கார்ப்பரேட் டேக்ஸ் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவில் அதிக அளவில் தொழில்கள் துவங்கப்படுகின்றன. இதன்மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. Ease of doing business தரவரிசையில் இந்தியா முன்னேறி வருகிறது. இதில் நிதி அமைச்சரின் பங்களிப்பு முக்கியமானது. 8. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். இது மாபெரும் சாதனையாகும் 9. PLI திட்டம் போன்ற பல முக்கிய விவரங்கள் கட்டுரையின் நீளம் கருதி விடுபட்டுள்ளன. சாதனைகள் அல்ல சரித்திரம் படைக்கிறார் நம் நிதி அமைச்சர். தேசம் பல வகைகளில் முன்னேறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நேர்மையான அரசு, திறமையான அரசு, முடிவு எடுக்கும் திறன் எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமரின் வழிகாட்டுதல். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோரின் நேர்மை திறமை முயற்சி காரணமாக மேற்கூறிய அனைத்து நன்மைகளும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன. அனைத்துமே கூட்டு முயற்சியின் பலன் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இருந்தாலும் நிதி அமைச்சராக தனது பணியை திறம்பட செய்த காரணத்தினால் இவையெல்லாம் சாத்தியம் ஆகியுள்ளன. நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment