Thursday, April 2, 2026

எல்லா மனிதர்களுக்கும் பாராட்டு மிகவும் பிடித்த ஒன்று.

 எல்லா மனிதர்களுக்கும் பாராட்டு மிகவும் பிடித்த ஒன்று. மனிதர்க்கு காது குளிர எத்தனை பாராட்டினாலும் போதாது. மனதின் பெரும் பசி அதற்கு தான்.. உண்மையில் பாராட்டு என்பது மிக போலியானவை. பாராட்டுகளில் நூற்றுக்கு தொன்னூறைந்து சதவீதம் உங்களை ஏய்ப்பதற்காகவும்,உங்களிடமிருந்து வேறு ஏதோ வாங்குவதற்காகவும், குறைந்த பட்சம் பதிலுக்கு பாராட்டப் படுவதற்காகவும் சொல்லப் படுகிறது. எதிர்பாா்த்து போடப்படும் தூண்டில் அது.. ஆகவே உண்மையாகவே பாராட்டப்பட்டாலும் அதை தலைக்கு எடுத்துச் செல்லாமல்.. புறந்தள்ளி, அதை ஒரு உந்து சக்தியாக கொண்டு மட்டுமே வாழப் பழகுங்கள்..

No comments:

Post a Comment

FEB 7