Thursday, April 2, 2026
#Theindoeuropeantradeagreement
வர்த்தகத்தைப் பொறுத்தளவில் உலகமெங்கும் நடைபெற்ற வரும் மாற்றங்களை யோசிக்கும்போது அது அடுத்த நூற்றாண்டின் மீது பலத்த செல்வாக்கைச் செலுத்தும் என்று தான் தோன்றுகிறது. ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு இருக்கிறது! அதன் மூலம் அமெரிக்காவிற்கு அது மிகப் பெரிய அளவில் செக் வைத்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மீது அதிகமாக வரிவிதிப்பேன் என்று டிரம்ப் மிரட்டியதால் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இந்தியா பக்கம் திரும்பி விட்டதை சற்றும் ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை. இந்திய குடியரசு தின விழாவிற்கு பிரபல நாட்டுத் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்! விருந்தினர்கள் யார் யார் என்பதைப் பொறுத்து இந்தியாவின் உலக ஸ்டேட்டஜியை புரிந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாக அமைகிறது! குடியரசான புதிதில் இலங்கை பூட்டான் பங்களாதேஷ் போன்ற குட்டி நாட்டுத் தலைவர்கள் விருந்தினராக கலந்து கொள்வார்கள் பின்னர் இங்கிலாந்தின் எலிசபெத் ராணி இளவரசர் பிலிப் அமெரிக்க மாஜி அதிபர் ஒபாமா என வல்லரசு நாட்டுத் தலைவர்கள் விருந்தினராக வந்தார்கள்! ரஷ்யா பிரான்ஸ் தவிர போருக்கு முன்பு சீனா பாகிஸ்தான் தலைவர்களும் கூட விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படியான காலங்கள் போக இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் அந்தோனியா கோஸ்டோ ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உருசுலா வான்ட்டர் லியான் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இங்கிலாந்து நார்வே போன்ற நாடுகளை தவிர்த்து 27 நாடுகளின் கூட்டமைப்பு ஐரோப்பிய யூனியன் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்!இவர்கள் இருவரும் குடியரசு தின விழா முதன்மை விருந்தினர் என்று அறிவிக்கப்பட்டதுமே அமெரிக்காவிற்குப் பயங்கரமான அதிர்ச்சி ஆகிவிட்டது!அடுத்த நாள் இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆன உடனேயே அமெரிக்கத் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிடத் தொடங்கி விட்டார்கள்! 2007 ஆம் ஆண்டிலேயே தடையற்ற வர்த்தக உறவு பற்றி இரு தரப்பும் பேசி வந்தாலும் 18 ஆண்டுகள் இழுபறிக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் இருப்பவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்! இது குறித்து டெல்லியில் உள்ள இந்திய வர்த்தகச் செயலாளர் ஒருவர் கூறும்போது “முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்கள்ப் பொருளாதாரம் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவயே நம்பி இருந்தன! எனவே அதன் அடிப்படையில் இந்தியா பற்றிய தவறான கருத்துக்களைப் பேசியும் பரப்பியும் வந்தனர். ஆனால் அதிபர் ட்ரம்ப் பொறுப்பேற்றுடன் நிலைமை தலைகீழாய் மாறியது! டென்மார்க்கின் கிரின்லாந்த் பகுதியை அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்தி கையகப்படுத்துவேன் அதற்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்க அதற்கு ஐரோப்பிய யூனியன் மறுத்துவிட்டது. எனவே டென்ஷனான ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு 25 சதவீத வரிகளை விதிப்பேன் என்று தடாலடியாக அறிவித்தார்! ட்ரம்பின் இந்த அறிவிப்புதான் ஐரோப்பிய யூனியனை ரொம்பவே யோசிக்க வைத்தது! என்றாலும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாய்ச் சென்று டிரம்பை சந்தித்தார்கள். அப்போதும்கூட ட்ரம்ப் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை!? கிரின்லாந்ததை அமெரிக்காவுடன் இணைக்க ஆதரவு கொடுங்கள் என்று மட்டுமே கறாராய் பேச சுவிட்சர்லாந்து பிரதமர் கேபார்மலின் ட்ரம்பைச்சந்திக்காமலேயே நாடு திரும்பிவிட்டார்! அதன் பிறகு ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் இனிமேல் டிரம்பை நம்பி பயன் இல்லை!அமெரிக்காவில்இனி எந்த வர்த்தகமும் செய்யக்கூடாது! அங்கிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு நாமும் வரி விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்! அது மட்டுமல்லாமல் இதையடுத்து அமெரிக்காவுக்கு மாற்று யார் என்கிற ஆலோசனைகளிலும் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள்! அப்பொழுது 24 தலைவர்களும் ட்ரம்புக்கு மாற்று பிரதமர் மோடி தான் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்! இந்தியாவுக்கு 50% வரியை ட்ரம்ப் விதித்திருக்கிறார்! அதில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் தண்டனை வரியும் அடங்கும். எனவே அமெரிக்க மார்க்கெட்டிற்குப் பதில் வேறு மார்க்கத்தை தேடிக் கொண்டிருக்கும் அவர்கள் இந்தியாவுடன் 18 ஆண்டுகளாய் இழுபறியில் இருக்கும் இந்திய ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இனி உறுதி செய்யலாம் என்று கிரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறார்கள்! இதனை தொடர்ந்து தான் அந்தோனியா கோஸ்ட்லாஉருசுலா வான்டட் லியான் ஆகியோர் குடியரசு தின விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாக இன்றைய நிலைமை இருக்கிறது!! மறுநாள் டெல்லியில் நடைபெற்ற1/3
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment