Thursday, December 15, 2022

#இந்திய_அரசியலில் நான் நீண்ட காலமாக கவனித்த பல விடயங்களுக்கு பதில் தெரியவில்லை. அவற்றில் சில: 1. நேதாஜி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தும் அவர் செயல்படாமல் போனதற்குக் காரணம் என்ன? 2. நேதாஜி மீது பிரிட்டிஷார் களங்கம் கற்பித்ததை திரும்பப் பெற இந்திய அரசு முயற்சிகள் எடுக்கவில்லையே... ஏன்? 3. பகத்சிங்கை தூக்குக்கயிற்றில் இருந்து காப்பாற்ற நாம் ஏன் முயலவில்லை? 4. நாடு விடுதலை பெற்ற பின் இதுவரை ஏறத்தாழ 105 திருத்தங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆனால் 250 ஆண்டுகளாகியும் அமெரிக்க அரசியல் சாசனத்தில் 17 - 18 திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன. அதன் பக்கங்கள், பிரிவுகளும் குறைவே.அம்மாதிரியான அரசியல் சாசனம் நமக்கு ஏன் அமையவில்லை? 5. ஐநாவில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி 70 ஆண்டுகளுக்கு முன கிடைத்தும் அதை ஏற்றுக் கொள்ள பண்டித நேருவுக்கு ஏன் தயக்கம் ஏற்பட்டது? 6. ஆனால், பாதுகாப்பு கவுன்சில் சீனா இடம் பெற, நேரு காலத்தில் அதை ஆதரித்ததும் ஏன்? 7. கடந்த 1962 - இல் சீனப் போரில் இந்தியா இழந்த இடங்கள் அதிகம். அது எப்படி என்று பின்பு ஆராயப்பட்டதா? அந்தப் போரின் காரணமாக வி.கே.கிருஷ்ணமேனனை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து விலகச் சொன்னது போல, நாம் இழந்த இடங்களைக் குறித்து ஏன், எப்படி என்று விவாதித்தோமா?. 8. இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்திலிருந்து ராஜீவ் காந்தி பிரதமராகும் வரை சோனியா காந்தி இந்தியாவின் பிரஜா உரிமை பெறவில்லை இத்தாலி பிரஜை என்று மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் வினா எழுப்பினார். பிரதமர் வீட்டுப் பெண்ணாக இருந்து கொண்டு பிற நாட்டு பிரஜையாக சோனியா காந்தி நீண்டகாலமாக வாழ்ந்தாரே… அது ஏன்? 9. இந்திய - சீனா உறவுகள் பதற்றமாக இருந்த நிலையிலும், காங்கிரஸ் கட்சி டிரஸ்டுக்கு சீன தூதரகம் 1.35 கோடி ரூபாய் ஏன் நன்கொடை கொடுத்தது? அதை காங்கிரஸ் கட்சி பெறலாமா? இந்திய அரசியல் களத்தில் இம்மாதிரி பல கேள்விகள் மனதில் இருக்கின்றன. பதில்கள்தாம் பிடிபடவில்லை.இன்னும் இப்படி பல வினாக்கள் உண்டு. #ksrpost 15-12-2022.

#இந்திய_அரசியலில் நான் நீண்ட காலமாக கவனித்த பல விடயங்களுக்கு பதில் தெரியவில்லை. அவற்றில் சில:







1. நேதாஜி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தும் அவர் செயல்படாமல் போனதற்குக் காரணம் என்ன? 

2. நேதாஜி மீது பிரிட்டிஷார் களங்கம் கற்பித்ததை திரும்பப் பெற இந்திய அரசு முயற்சிகள் எடுக்கவில்லையே... ஏன்? 

3. பகத்சிங்கை தூக்குக்கயிற்றில் இருந்து காப்பாற்ற நாம் ஏன் முயலவில்லை?

4. நாடு விடுதலை பெற்ற பின் இதுவரை ஏறத்தாழ 105 திருத்தங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆனால் 250 ஆண்டுகளாகியும் அமெரிக்க அரசியல் சாசனத்தில் 17 - 18  திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன. அதன் பக்கங்கள், பிரிவுகளும் குறைவே.அம்மாதிரியான அரசியல் சாசனம் நமக்கு ஏன் அமையவில்லை?

5. ஐநாவில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி 70 ஆண்டுகளுக்கு முன கிடைத்தும் அதை ஏற்றுக் கொள்ள பண்டித நேருவுக்கு ஏன் தயக்கம் ஏற்பட்டது?  

6. ஆனால், பாதுகாப்பு கவுன்சில் சீனா இடம் பெற, நேரு காலத்தில் அதை ஆதரித்ததும் ஏன்?

7. கடந்த 1962 - இல் சீனப் போரில் இந்தியா இழந்த இடங்கள் அதிகம். அது எப்படி என்று பின்பு ஆராயப்பட்டதா? அந்தப் போரின் காரணமாக வி.கே.கிருஷ்ணமேனனை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து விலகச் சொன்னது போல, நாம் இழந்த இடங்களைக் குறித்து ஏன், எப்படி என்று விவாதித்தோமா?.

8. இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்திலிருந்து ராஜீவ் காந்தி  பிரதமராகும் வரை சோனியா காந்தி இந்தியாவின் பிரஜா உரிமை பெறவில்லை இத்தாலி  பிரஜை என்று மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் வினா எழுப்பினார். பிரதமர் வீட்டுப் பெண்ணாக இருந்து கொண்டு பிற நாட்டு பிரஜையாக  சோனியா காந்தி நீண்டகாலமாக வாழ்ந்தாரே… அது ஏன்?

9. இந்திய - சீனா உறவுகள் பதற்றமாக இருந்த நிலையிலும், காங்கிரஸ் கட்சி டிரஸ்டுக்கு சீன தூதரகம் 1.35 கோடி ரூபாய் ஏன் நன்கொடை கொடுத்தது? அதை காங்கிரஸ் கட்சி பெறலாமா?  

இந்திய அரசியல் களத்தில் இம்மாதிரி பல கேள்விகள் மனதில் இருக்கின்றன. பதில்கள்தாம்  பிடிபடவில்லை.இன்னும் இப்படி பல வினாக்கள் உண்டு.

#ksrpost
15-12-2022.

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...