Wednesday, December 23, 2020

 ‘’ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்,

கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்,
திருநாரணந்தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’’
-நம்மாழ்வார் (நாலாயிர திவ்யபிரபந்தம்)
நாடு முழுவதிற்கும் அரசனாக எந்தப் போட்டியும் இல்லாமல் வெகுகாலம் ஆண்டவர்கள் ஒரு காலத்தில் அனைத்தையும் இழந்து ஏழைகளாகி விடுகிறார்கள். கரிய நாய்கள் துரத்தித் துரத்திக் கால்களைக் கவ்வ, உடைந்த பிச்சைப்பாத்திரத்தைக் கையில் தாங்கி உலகமெல்லாம் திரண்டு வந்து அந்த பரிதாபக் காட்சியைக் காணும்படியாக இப்பிறவியிலேயே பிச்சைக்காரர்களாகி விடுகிறார்கள். செல்வத்தின் தன்மை இதுதான், அதனால் அந்தத் திருமகளோடு சேர்ந்த திருமாலின் திருவடிகளை விரைவாக சிந்தித்து அதனால் உய்வு பெறுங்கள்...



No comments:

Post a Comment

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.