————————————————-
எது நித்தியமான, களங்கமற்ற, நிர்மலமான, புனிதமானதாக இருக்கிறதோ, அதை ஒருவர் கண்டறிய வேண்டும். புரிதல்,காருண்யம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்;
அதாவது, துயரத்தின் – உங்கள் துயரத்தை மட்டுமின்றி, உலகத்தின் துயரத்தின் முக்கியத்துவத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.
அந்த துயரத்தில் வாழ்வதற்கு, தப்பித்துச்செல்லாமல் அதன் இறுதிவரை செல்லுங்கள். நீங்கள் அதிலிருந்து தப்பித்துச்செல்லாமல் அதனை சந்திப்பதற்கு, மகத்தான ஆற்றல் ,அற்பனிப்பு, தியாகம், தெளிவு தேவைப்படுகிறது.
அப்போதுதான் அதை கடந்துபோக முடியும். உச்ச பட்ச துயரத்தின் ஒட்டுமொத்த அர்த்தத்தை புரிந்துகொள்ளும்போது மட்டுமே காருண்யம் உதயமாகும். நிர்மலமான வாழ்வும் தெரியும்......
14-9-2020.

No comments:
Post a Comment