Tuesday, July 28, 2026

எங்கோ படித்தது…..

 எங்கோ படித்தது…..

—————————————————————————- எனக்கு எப்போதுமே வாழ்க்கை மீது புகார் ஏதும் கிடையாது! வறுமையும் துன்பங்களும் அவதூறுகளும் என்னைச் சூழ இருந்த தருணங்களிலும் மரணத்தின் வாசலுக்கு சென்று மீண்ட போதும் வாழ்க்கையைத் துணிச்சலாகவும் சுவராசியமாகவும் எதிர்கொண்டவந்திருக்கிறேன்!. இலக்கியமும் என் கற்பனைத் திறனும் என்னைக் கைவிடாத வரை எனக்கு எந்தக் குறையும் இல்லை! வாழ்க்கை என்னும் விளையாட்டு எப்பொழுதும் ஒருவரை வாட்டி வதைக்கிறது!இன்னொருவரை அன்பாக நடத்துகிறது! நாம் ஒன்று சேர்ந்திருந்தால் உங்கள் அதிர்ஷ்டத்தில் என் வாழ்க்கை நன்றாக அமைந்திருக்கலாம்! இல்லை என் துரதிர்ஷ்டத்தால் உங்கள் வாழ்க்கை நரகமாகியிருக்கலாம்.! அவரவர் விதிக்கேற்ப வாழ்க்கை அமைகிறது! அதோடு எல்லா உறவுகளுக்குமே ஏதோ ஒரு எக்ஸ்பைரி அதாவது காலாவதியாகும் நாள் உண்டு! அது நமக்கு எப்போதோ ஆகிவிட்டது! திடீரென்று எதற்காக என்னைத் தேடி வருகிறீர்கள்! உங்களுக்குப பொழுது போகவில்லை! உங்களுக்கு வேலை இல்லை! அதனால் கவலை இல்லை! எனக்கு செய்ய நிறைய வேலை இருக்கிறது! யாரையும் தேட வேண்டிய அவசியமும் இல்லை! உங்களை நான் என்றோ உதறிவிட்டேன்! அந்த உறவையும் நட்பையும் புதுப்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை! என் மனதில் உள்ளது இதில் இருக்கிறது! #life



No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...