கரூர் சம்பவத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப் பணி ரத்து: எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புதான்!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு முதல்வர் விஜய் அரசுப் பணி வழங்கியபோதே, இது முறையற்றது. சட்டரீதியாக தவறு. அத்துடன் எதிர்காலத்தில் இதனால் ஏற்படப் போகும் பிரச்னைகள் என்ன என்பதை பணி நியமன ஆணை வழங்கிய அன்றே பதிவிட்டிருந்தேன். நான் எதிர்பார்த்ததுபோலவே, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்திருக்கிறது. அரசுத் தரப்பில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்கிறது. உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்கும். கருணை அடிப்படையில் அரசு வேலை: முதல்வர் விஜய்யின் விபரீத முடிவால் வரப்போகும் விளைவுகள் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தாலும், இதன் விளைவுகளைச் சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால்... ஒரு பக்கம் சட்ட சிக்கலையும், மறுபக்கம் கோரிக்கை எங்கெல்லாம் இருந்து வரும் என்று நினைக்கும்போதே முதல்வர் விஜய் முடிவு எங்கே கொண்டு போய்விடும் என்று நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது!
Subscribe to:
Post Comments (Atom)
#மேகாதாட்
#மேகாதாட் மேகாதாட்வில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவற்கான திட்ட அறிக்கை (DPR) திருப்பி அனுப்பிவைப்பு!! தமிழகத்தின் ஒப்புதலின்றி இத...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment