விடுவிக்க சொல்லி கடவுளிடமிருந்து கட்டளை வருகிறது. அங்கிருந்து கிளம்பிய அவன் சந்திக்கும் வினோதமான மனிதர்கள், சாகசங்கள், கடல் பயணங்களில் சந்திக்கும் பல்வேறு விதமான ஆபத்துகள் என்று ஏகப்பட்ட கிளைக் கதைகளாக பிரியும். அத்தனையையும் மிக சுருக்கமாக நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
ராட்சச பாறை போலிருக்கும் ஒற்றைக்கண் அரக்கன் பாலிபேமஸிடம் சிக்கிக் கொள்வது, தீவில் ஒதுங்கும் மனிதர்களை எல்லாம் பன்றிகளாகவும் மிருகங்களாகவும் மாற்றும் சர்சியின் மாளிகையில் மாட்டிக் கொள்வது, தன்னுடைய தந்திர புத்தியாலும் அதீனாவின் உதவியாலும் அவளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவது, பாதாள உலகத்துக்கு பயணப்பட்டு எதிர்காலம் குறித்த குறி கேட்பது, பல்வேறு ஆவிகளின் கதைகளை கேட்பது, சைரன்கள் எனும் அழகான பாடல்களால் பாடி மனிதர்களை மயக்கி சதையோடு கூடிய எலும்பு மலையாக மாற்றும் இடத்தை தந்திரமாக கடந்து செல்வது, சிலா மற்றும் கரிப்டஸ் என்று இடையில் வரும் ஆபத்துகளை கடந்து சென்றாலும் வழியில் வரும் ஆபத்துகளிலெல்லாம் போர்வீரர்களை கொத்து கொத்தாக இழக்கிறான். கடல் நீரை பயங்கரமான சத்தத்தோடு உறிஞ்சும் கரிப்டஸ், ஆறு கழுத்து ஆறு தலை உள்ள கொத்தாக போர் வீரர்களை தூக்கிச் சென்று திங்கும் சிலா, மனிதர்களை பிடித்து பூச்சி தின்பது போல் திங்கும் போஸிடாசின் மகன் பாலிபேமஸ் என்று அதன் கிளைக் கதைகளும் அத்தனை சுவாரசியமாக செல்கிறது. இத்தனை சாகசங்கள் நிறைந்த பயணத்தில் கடைசியாக ஒடிசியஸ் இதாக்கா திரும்பினாரா? தந்தையைத் தேடி பயணப்பட்ட #டெலிமாச்சஸ்க்கு என்னவாயிற்று? ஒடிசியஸ் கடைசியாக தன்னுடைய காதல் மனைவியான #பெனலோப்பியை சந்தித்தானா? என்பதே விறுவிறுப்பான கொஞ்சமும் சுவாரசியம் குறையாத சாகசப் பயணக் கதை . க முக்கியமான இரண்டு காவியங்களில் ஒன்றாகும். புகழ்பெற்ற கவிஞர் ஹோமரால் கிமு 9 ஆம் நூற்றாண்டில் இது இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.முக்கிய தகவல்கள்கதைக்களம்: டிராய் (Troy) போருக்குப் பிறகு, இத்தாகா (Ithaca) நாட்டு மன்னனான ஒடிசியஸ் (Odysseus) தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப மேற்கொள்ளும் 10 ஆண்டு கால ஆபத்தான கடல் பயணமே இக்காவியத்தின் மையக்கரு.பாத்திரங்கள்: கடலில் பயணிக்கும் போது அவர் சைக்ளோப்ஸ் (ராட்சதன்), சைரன்கள் (Sirens), மற்றும் சர்க்கி (மாயக்காரி) போன்ற பல புராண உயிரினங்களையும், சோதனைகளையும் எதிர்கொள்கிறார்.திரைப்பட வடிவம்: இந்த இலக்கியக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) இயக்கத்தில் மேட் டேமன் (Matt Damon) மற்றும் ஆன் ஹாத்வே (Anne Hathaway) நடிப்பில் 'தி ஒடிஸி' (The Odyssey) திரைப்படம் வெளியாகியுள்ளது.ஒடிஸி காவியத்தை பற்றியும் அதன் புராண பின்னணியை பற்றியும் விரிவாகப் பார்ப்போம்:முக்கிய கதாபாத்திரங்கள்ஒடிசியஸ்: இத்தாகாவின் மன்னன்; மிகுந்த புத்திசாலித்தனம் மற்றும் தந்திரமான சிந்தனை கொண்ட மாவீரன்.பெனிலோப்: ஒடிசியஸின் மனைவி; தனது கணவன் திரும்பி வருவான் என பல வருடங்கள் காத்திருப்பவள்.டெலிமாக்கஸ்: ஒடிசியஸின் மகன்; தனது தந்தையைத் தேடித் தன் பயணத்தைத் தொடங்குபவர்.காவியத்தின் முக்கிய அம்சங்கள்ஒடிஸி மொத்தம் 24 பாகங்களைக் கொண்டது. இதன் கதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி, ஒடிசியஸ் தனது பயணத்தில் சந்திக்கும் சவால்களையும், இரண்டாவது பகுதி அவர் தனது ராஜ்யத்தைத் தன் மனைவியைத் தவறாக அடைய நினைக்கும் எதிரிகளிடம் இருந்து எவ்வாறு மீட்கிறார் என்பதையும் விவரிக்கிறது.திரைப்படப் பார்வைகிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ஒடிஸி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் மற்றும் காட்சிகள், இதன் மாயாஜால உலகத்தை திரையில் எவ்வாறு உயிர்ப்பித்துள்ளது என்பதை விளக்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment