Tuesday, June 30, 2026

#அவசரநிலையின்50ம்ஆண்டு

 #அவசரநிலையின்50ம்ஆண்டு

#முரசொலியின்மௌனம் •••• இன்றைய முரசொலி யை பார்த்தபோது சண்முக மயமாகவே இருந்தது இ.கம்யூனிஸ்ட் தலைவரைப்பற்றிய கண்டன அறிக்கைகள், கட்டுரைகள் பக்கம் பக்கமாக நிரப்பப்பட்டுள்ளது. இன்றைக்கு ஜுன் 25 இந்திய ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். அவசரகால பிரகடனம் அறிவிக்கப்பட்ட நாள். அவசரகால மிசா சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் திமுக வினர் சொல்வார்கள் . இந்திராகாந்தி கொண்டுவந்த இந்த கருப்பு சட்டத்தை ஆக்ரோஷமாக எதிர்த்த திமுக வினர் இன்றைய அவசரகால 50ம்ஆண்டு நினைவேந்தும் நாளில், முரசொலி ஒரு வார்த்தைக்கூட பேசாமல், ஒரு எழுத்தைக்கூட இல்லாமல் இருப்பது வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருக்கிறது. மிசா பற்றிய எந்தக் கருத்தும், எந்த செய்தியும், தகவலும் முரசொலியில் இல்லை. ஸ்டாலின் போற்றி, ஸ்டாலின் போற்றி என்ற ஒரு பக்க விளம்பரம்தான் நிறைந்து வழிகிறது. #emergency #நெருக்கடிநிலை #அவசரநிலை #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost

No comments:

Post a Comment

JULY 19