வாழ்க்கை என்பது முற்றிலும் கெடுதல்களே நடக்கும் விஷயமல்ல.. முற்றிலும் நல்லவைகளே நடக்கும் விஷயமும் அல்ல.நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும்..
நாலு கெட்டது நடக்கும் போது, நடுவில் முள் செடியில் மலர் போல யாரோ ஒருவர் அறிமுகமாகி மிகச் சரியானபடி உதவிகள் செய்வாா்.. ஏன் என்ற காரணம் முக்கியமில்லை. எதோ காரணத்தால், எதோ விதமான உதவிகள் பரஸ்பரம் மனிதர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.. வாழ்க்கை விசித்திரமானது. அது எந்த இலக்கணத்திற்கும் அடங்காதது. அது இந்த வகையானது என்று வரையறுத்துக் கூற எவருக்கும் திறனிருந்ததில்லை.. திறனுடையோர் இதைப்பற்றி வெளியில் சொன்னதில்லை..
No comments:
Post a Comment