Thursday, July 16, 2026

மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல்களில்,,

 மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல்களில்,,

இதுவுமொன்று,,, பிள்ளைக்கு,,, காரணி என்னவென்று ? நானறியேன்,,,? ஒருவேளை,,,, தீர்த்தக் கரைகள்,,, உள்ள கோவில்களாய்ச் சுற்றுவதால் இருக்குமோ ? அவனறிவான் ! அவன் மட்டும் தான் அறிவான் ! கீழே,,,பாரதியின் பாடல்,,, தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி பாவை தெரியுதடி மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ




No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...