Thursday, June 25, 2026

நான் எப்போதும் ஸ்டாலினுக்குப் பாதுகாவலன்.!

 நான் எப்போதும் ஸ்டாலினுக்குப் பாதுகாவலன்.! மேலும் உற்ற சகோதரனாக இருந்து அவருக்கு உதவியாக அவருடைய சிரமமான நேரங்களில் வழிநடத்திச் செல்வேன்! திராவிட இயக்கத்தின் மூலம் அவருக்குப் பாதுகாப்பாக சிலவற்றை வீழ்த்த வேண்டியது அவசியம் என்று கலைஞரிடம் உத்தரவாதம் தந்து தொடர்ந்து அது பற்றி பேசிக் கொண்டு வந்தவர்தான் இந்த வைகோ!

இன்றைக்கு எப்படியாவது விஜயின் தவெ க வில்சேர்ந்து விட வேண்டும் என்பதில் பதற்றமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார். இந்தக் காலத்தில் அது அவரது விருப்பமாக இருக்கிறது! என்ன செய்ய? எங்களோடு இருக்கும் வரை எல்லாவற்றையும் மிகமுறையாகப் பேசிக் கொண்டிருந்த இவர் இன்றைக்கு தன் மகன் பேச்சைக் கேட்டுக் கொண்டு இடம் மாறி ஆடிக் கொண்டிருக்கிறார்! அதற்கு நாங்கள் பொறுப்பல்ல! இப்படி அவர் இருப்பதைத்தான் எங்களால் பார்க்கச் சகிக்கவில்லை! இப்போது அவரை விட்டு நாங்கள் வெளியே வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது! ஆனால் அவரின் இன்றைய வளர்ச்சிக்கு நாங்கள் கொடுத்த விலையோ அதிகம்! அதை யாரும் மறுக்க முடியாது! அதற்குக் கைமாறாக அவர் ஏதோன்றையும் எங்களுக்குச் செய்ததும் இல்லை! இன்றைக்கு சோசியல் மீடியாவில் இருப்பவர்களுக்கு எது ஒன்றும் தெரியாது! எங்களைப் பற்றிக் குறை சொல்வார்கள்! அதுநொள்ளை இது நொள்ளை என்று எழுதுவார்கள் பேசுவார்கள்! 80 90களில் என்ன நடந்தது என்றே தெரியாத பத்தாம் பசலிக் கூட்டம். 2001 இல் பிறந்து தலையெடுத்த பயல்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் அல்ல! என்னிடம் இருக்கும் விஷயங்களை எடுத்துச் சொல்ல தொடங்கினால் யாரும் தாங்க மாட்டார்கள். அன்றைக்கு வீரமணியைப் பார்த்து வைகோ சொன்னார்! என்னிடம் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது அதை எல்லாம் எடுத்து போட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று!அதே பதிலேயேதான் எங்களாலும் வைகோவுக்குச் சொல்ல முடியும்! . எங்கள் அரசியல் வாழ்க்கை அவரால் பல வகையிலும் வீணானபோதும் பொறுமையாகத் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்! அன்றைக்கு வாஜ்பாய் அமைச்சரவையில் முதல் வரிசையில் கலைஞருடன் இடம்பெறும் அளவிற்கு பாட்டாளி மக்கள் ராமதாஸும் இவரும் நிகராக இருந்தார்கள். இன்றைக்கு இரண்டாவது வரிசையில் அமரும் அளவிற்குப் போனதற்கு யார் காரணம்? இந்த அவலத்திற்கெல்லாம் காரணம் வைகோ தானே? இது தேவையா?மூன்று முறை ராஜசபா எம்பி ஆனதற்குக் காரணம் திமுக! திமுக ஆதரவில் சிவகாசியில் 1999 லோக்சபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்! இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அப்பனும் மகனும் அவர்களுக்குள்ளேயே பேசி தங்களுக்குள்ளே செய்ய வேண்டியது எல்லாம் செய்து கொள்வார்களாம்! எங்களைப் போன்று உழைத்து வந்தவர்களுக்கெல்லாம் கல்தா கொடுத்துவிட்டு குடும்ப வாரிசு அரசியலை முன்னிறுத்துவார்களாம் என்னையா இதெல்லாம்!? . உங்களுக்காக உழைத்தவர்களுக்கு நீடித்து அதில் இருந்து செயல்பட்டவர்களுக்கு எம்எல்ஏ வோ எம் பி யோ என்று ஒரு பதவியும் கொடுக்காமல் எல்லா இடத்திலும் எல்லாப் பதவிகளிலும் நாங்கள்தான் இருப்போம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? தங்கள் அடிமைகளுக்கு பிஸ்கட்டைப் போடுவது போல ஒரு எம்எல்ஏ அது இது என்று ஒரு சீட்டைக் கொடுத்து தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதுதான் உங்களின் பேராசைக்கான வழிமுறையா?! இதுதான் இவர்களது நிலைமை என்று நான் பலகாலமாக சொல்லி வருகிறேன் ! இதையும் ஸ்டாலின் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! எங்களைப் போன்றவர்கள் ஏதேனும் ஞாயம் சொல்லி எதிர்த்தால் தூற்றுவீர்கள்! இவர்கள் எல்லாம் வந்து விட்டால் எங்களை வெளியேற்றி விடுவீர்கள்.! இப்போது இவர்கள் செய்யும் செயல்ககள் எல்லாவற்றுக்கும் இவர்களைத் தூக்கிப்பிடித்த நீங்கள்தான் காரணம்!. திமுகவிற்கு இதுவும் வேண்டும்! இன்னமும் வேண்டும்! கலைஞர் இவற்றையெல்லாம் மிகவும் புத்திசாலித்தனமாகப் புரிந்து கொண்டு யாரை எங்கே வைப்பது என்று தெரிந்து செயல்படுவார்! ஸ்டாலினுக்கு இம்மாதிரி விஷயங்களில் திறமை போதாது என்ன செய்ய!? #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்



No comments:

Post a Comment

JULY 27