Friday, June 26, 2026

#தாமிரபரணி நதியில் நடந்த அகழாய்வுப் பெருமைகளைப் பேசும் “பொருனை” ஆவணத் திரைப்படம் துருக்கி சர்வதேசத் திரைப்பட விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

 #தாமிரபரணி நதியில் நடந்த அகழாய்வுப் பெருமைகளைப் பேசும் “பொருனை” ஆவணத் திரைப்படம் துருக்கி சர்வதேசத் திரைப்பட விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

3000 ஆண்டுகளுக்கு முன்னே பொருனை நதிக்கரையின் கொற்கை ஆதிச்சநல்லூர் பகுதிகள் அக்காலத்தில் மிகப்பெரிய மாநகரங்களாக விளங்கியதை இப்படத்தில் பதிவு செய்துள்ளதாக அக்குழுவினர் பெருமிதமாக அறிவித்துள்ளார்கள். “தன் #பொருனை” என வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் அழைக்கப்பட்ட வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் சிறப்புகளை இவ்வாறு சர்வதேசத் துருக்கித் திரைப்பட விழா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு வகையில் நடக்கும் திரை விழாக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிக் கொண்டு படக் குழுவினர்களுக்கு வாழ்த்துகளையும் எனது மனமார்ந்த மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்! அங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வந்திருக்கும் மனித வாழ்க்கையும் அங்கு நடந்த வந்த சூழல் உயிரியல் நாகரீகமும் உலகின் எந்தத் தொன்மையான நாகரிகத்துக்கும் குறைவு பட்டது அல்ல! என்பது தனிப்பட்ட எனது அபிப்ராயம்!



No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்