Thursday, July 22, 2021

ஜெயலலிதா (1970-80 களில்)

#ஜெயலலிதா (1970-80 களில்)
————————
இரண்டு நாட்களுக்கு முன் 1989-ல் திமுக ஆட்சி அமைந்தபோது, தலைவர் கலைஞர் முதலமைச்சராக, தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்தபொழுது ஜெயலலிதா  தகராறு செய்தததை, நீண்ட பதிவாக செய்திருந்தேன். பலரும் அதை கவனித்தார்கள். என்னிடம்  சிலர் அது குறித்தும் கேட்டார்கள். 
அந்தக் கடிதம் குறித்து, போலீஸ் கமிஷனர் துரையை குறித்தும் நீங்கள் எழுதியுள்ளதை விவரமாக தெரிய வேண்டுமென்று சொன்னார்கள். நான் கேள்விப்பட்ட வரையில் அந்தக் கடிதத்தினுடைய, பின்னால் என்ன நடந்தது என்று நான் கேள்விப்பட்டதுதான். நான் நேராக பார்க்கவில்லை. என் காதுக்கு வந்த செய்தியை உங்களிடம்  (1)ல்பகிர்கின்றேன். 

மற்றொரு கட்டத்தில் 1983-84 கட்டத்தில் ஜெயலலிதாவைசந்திக்கக் கூடிய வாய்ப்புண்டு.அப்பொழது நான்



நெடுமாறனின் தமிழ்நாடு காங்கிரஸின்
பொதுச்செயலாளர், திமுகவில் இல்லை.
அவர் நாடாளுமன்றத்திற்குச் சென்ற நேரம், எம்ஜிஆர் விரும்பிய படி தம்பி, வேலு பிள்ளை பிரபாகரனை அழைத்துக் கெண்டு சந்தித்ததுண்டு. அப்பொழுது அவர் சொன்னது, அப்பொழதும் அதன் முன்பும் எப்படி பொழுது போக்குகின்றேன், இலக்கிய களத்திலும், பத்திரிகை துறையிலும் தான் என்ன எழுதுகின்றேன் என்று இரண்டாவது பதிவில் (2)நான் குறிப்பிட்டுள்ளேன். 
இதில் நான் ஜெயலலிதாவை பற்றிப் பார்த்ததும், அறிந்ததும் கடந்த கால நிகழ்வுகள்…நினைவுகள்….

அந்தக் கடிதத்தை பொறுத்தவரைக்கும் நான் கேள்விப்பட்டதை தான் நான் சொல்லுகின்றேன். நான் நேரில் கவனிக்கவில்லை.  அன்று பேசப்பட்டவகையில் (1) முதல் பதிவு….

ஜெயலலிதா அவர்கள் சொன்ன எழுத்து பணிகளைப் பற்றி, அவர் சொன்னதை அப்படியே( 2)இரண்டாவது பதிவில் கீழே கொடுத்துள்ளேன்.

(1)ஜெவின் ராஜினாமா கடிதத்தை அவரின் டிரைவர் பத்திரிகை அலுவலகத்திற்கு எடுத்து செல்வதை கேள்விப்பட்ட நடராஜன் அதை கேள்விப்பட்டு பாதி வழியில்  டிரைவரிடம் இருந்து பிடுங்கி தன்னிடம் வைத்துக்கொண்டார். அதை கேள்விப்பட்ட ஜெயா நடராஜனிடம்  சண்டைபோட்டார். அப்போது தான் நடராஜன் வீட்டில் கிடைத்து. முரசொலியில் வெளி வந்தது. சம்பவத்தின் பின்னணி இது தானே. சட்டசபையில்  ரகளையை ஏற்படுத்த வேண்டும் என்று ஜெயல்லிதா திட்டமிட்டார்

(2)கல்கியில் தொடராக வெளிவந்த நாவல்: உறவின் கைதிகள். துக்ளக்கில் ‘எண்ணங்கள் சில’ என்று தொடர். தாய் வார இதழில் ‘எனக்குப் பிடித்த ஊர்’, ‘எனக்குப் பிடித்த வாத்தியார்’, ‘எனக்குப் பிடித்த ஓவியர்’, ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்’, ‘எனக்குப் பிடித்த நாவல்’, ‘எனக்குப் பிடித்த த்த்துவ ஞானிகள்’ என 45 கட்டுரைகள் எழுதி, அவைகள் ‘மனதைத் தொட்ட மலர்கள்’ என்ற நூலாக வெளிவந்துள்ளது.1968ல் பொம்மை இதழுக்காக எம்.ஜி.ஆரிடம் நேர்காணல் எடுத்திருக்கிறார்.தன்னை
குறித்தான நினைவுகள் குமுதம் ஏட்டில்.
இந்த தொடர் இறுதி படுத்தாமல் நின்றது.

#ksrpost
22-7-2021.


No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...