Tuesday, July 27, 2021

இப்படி நாயக வழிபாடு மூலம் அறிஞர், தியாகி, விஞ்ஞானி இன்னும்….. பல என மிகை உணர்ச்சியில் ஜாக்கி போட்டு நிறுத்துவது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.

கடந்த காலத்தில் சினிமாவில் ஜாதியோ மதப்பற்றோ அடையளங்கள் இல்லாமல் இருந்தது. சிவாஜிகணேசன் இஸ்லாமியராக பாவமன்னிப்பிலும் ,
கிருஸ்த்துவராக ஞானஒலி திரைப்படத்திலும், வேறு ஒரு படத்தில் பாதிரியாராகவும், திருமால் பெருமையில் ஆழ்வார்களாகவும், திருவிளையாடலில் சிவனாகவும் நடித்துள்ளார். அது போலவே எம்.ஜி.ஆரும் சிரித்துவாழ வேண்டும் என்ற படத்தில் மேரேனாம் அப்துல் ரகுமான் என்ற பாடலை பாடியும் வேறொரு படத்தில் கிருஸ்த்துவராகவும், முருகராகவும் வந்து திரைபடங்களில் காட்சிதந்ததுண்டு. இதெல்லாம் அந்த காலவரலாறு இன்றைக்கு தான் சார்ந்த தகுதி, தரமற்ற அடையாளங்களை ஜாக்கி வைத்து தூக்குவதில் தான் அரசியல், திரைத்துறை போன்றவை ஆக்கப்பூர்வம் இல்லாமல்  எவ்வித தொய்வின்றி தங்கள் விருப்பங்களை கடமைகளாக ஆற்றிவருகின்றனர்.

 இப்படி நாயக வழிபாடு மூலம் அறிஞர், தியாகி, விஞ்ஞானி இன்னும்…..
பல என மிகை உணர்ச்சியில் ஜாக்கி போட்டு நிறுத்துவது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.

#ksrpost
27-7-2021.


No comments:

Post a Comment

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology*

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology* —————————————— *திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான ...