Monday, July 26, 2021

பன்மொழிப்_புலவர்_ஜகந்நாத_ராஜா

#பன்மொழிப்_புலவர்_ஜகந்நாத_ராஜா எங்கள் கரிசல் மண்ணில் மூத்த படைப்பாளி. பல கற்றும் எளிமையாக பழகுபவர், அவரை சந்திக்கும்போதெல்லாம் சமீபத்தில் வந்த நூல்கள் கி.ரா, திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழக செயல்பாடுகள் பற்றி பேசுவார். ஒரு முறை இவரோடு அங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது உண்டு.

ராஜபாளையத்தில், 1933 ஜீலை 26ல் பிறந்தவர் மு.கு.ஜகந்நாத ராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி, ஆங்கிலம், துளு என, பல மொழிகளை கற்றறிந்தார்.
திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றை தெலுங்கில் மொழிபெயர்த்தார். திருக்குறளை தெலுங்கிலும், முத்தொள்ளாயிரத்தை கன்னடம் மற்றும் மலையாளத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார்.மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ’ஆமுக்த மால்யத’ என்ற காவியத்தை 1988ல் தமிழாக்கம் செய்தார். இந்நூலிக்கு, சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தமிழில் மொழிபெயர்ப்புக்கு கிடைத்த முதல் விருது இது தான்.
கவிதை, குறுங்காவியம், இலக்கியத் திறனாய்வு என 80க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 2008 டிசம்பர் 2ல் தன் 75வது வயதில் காலமானார். பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாத ராஜா பிறந்த தினம் இன்று.

#ksrpost
26-7-2021.



No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...