Friday, July 30, 2021

#காலங்களுக்கு_ஏற்றவாறு_நியாங்கள்

#காலங்களுக்கு_ஏற்றவாறு_நியாங்கள்
———————————————————
இங்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அவரவர் போக்கில் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள் அல்லது நேசமுடனிருந்து பிரியம் செலுத்துகிறார்கள். வெறுப்பதற்கு அதிகமான விஷயம் எதுவும் வேண்டியதில்லை. எதாவது ஒரு சிறு காரணம் போதும். அவர்கள் நம்மிடமிருந்து பெற்ற பெரிய உதவிகள், அன்றைய அவர்களின் தேவைக்கு நமது கையை பிடித்து கெஞ்சி நம்மை இந்திரன் சந்திரன் என பேசியது…
அவர்களின் தேவை முடிந்த பின் நம்மை
பார்த்தும் காணாமல் மாதிரி செல்வது…
நன்றியா? அதன் அர்த்தம் என்ன?….இது இயல்பு இன்று ஆகி விட்டது.தங்களின் வசதிக்கு ஏற்றவாறு 



நியாங்களை  வைத்துக்கொண்டு பிடிவாதமாக காலங்களுக்கு ஏற்ற வாறு மாற்றி மாற்றி பேசுவது….
மௌனங்களில் 
தொங்கிக் கொண்டிருக்கிறது
இன்னும் சொல்லில் அடங்கா
ஒரு ஊமைக்கதை

இதை நினைத்தால்
 ஒரு பெரும் அமைதி நிலவிக் கொண்டிருக்கின்றது.

இதுதான் உலகம் என கடக்க வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
29-7-2021.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...