Friday, July 23, 2021

சுப்பிரமணிய_சிவா

#சுப்பிரமணிய_சிவா
———————————
திண்டுக்கல் மாவட்டம்வத்தலகுண்டுவில், 1884 அக்டோபர் 4ம் தேதி பிறந்தவர், சுப்பிரமணிய சிவா. அவரது குடும்பம், வருமையில் வாடியது. இலவச உணவு கிடைக்கும் என்பதால் திருவனந்தபுரம் சென்று படித்தார். சிவகாசியில் காவல் துறை எழுத்தராக சேர்ந்து, மறுநாளே விளகினார். 
தமிழ், ஆங்கிலத்தில் புலமைப் பெற்றவர். திருவந்தபுரத்தில் இளைஞர்களைத் திரட்டி ”தர்ம பரிபாலன சமாஜம்” என்ற அமைப்பை உருவக்கினார். சென்னை, கோல்கட்டா, தூத்துக்குடி, திருனல்வேலியில் தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
‘ஞானபானு, பிரபஞ்ச மித்திரன்’ போன்ற இதழ்களைத் துவக்கினார் 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வ.உ.சிதம்பரம், பாரதியாருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். பலமுறை சிறைவாசம் அனுபவித்தார். தொழுநோயால் பதிக்கப்பட்டு, சிறையில் துயரம் சந்தித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில், ‘பாரதபுரம்’ என்ற ஆசிரமம் நிறுவினார்.
பாரதமாதா கோவில் கட்ட, ஊர் ஊராக சென்று நிதி திரட்டினார். ஆனால் அவரின் கனவு நிறைவேறவில்லை. 1925 ஜீலை 23ம் தேதி தன் 41வது வயதில் இறைவனடி சேர்ந்தார். ’வீரமுரசு சுப்பிரமணிய சிவா’  நினைவு தினம் இன்று.


No comments:

Post a Comment

If you don’t leave your past in the past, it will destroy your future.

  _If you don’t leave your past in the past, it will destroy your future. Live for what today has to offer,not for what yesterday has taken ...