Saturday, July 10, 2021

கோவில்பட்டி

#கோவில்பட்டி
——————————-
அடியில் உள்ள இரண்டு படங்களில் முதலாவது கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் அமைந்துள்ள ரயில்வே பாலம்,. இப்போது பழுதுபார்க்கப்படுகின்றது. 
வைகோ சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கோவில்பட்டி நகரத்தில் மூன்று மேம்பாலங்கள் அமைத்து கொடுத்தார், ஒன்று லட்சுமி மில் அருகிலும் மற்றொன்று கோவில்பட்டி ரயில்வே நிலையம் விவசாய பண்ணை செல்லுகின்ற சாலையில் அமைந்துள்ள மேம்பாலம், மற்றொரு பாலம் இளையரசனேந்தல் சாலையில் அமைந்துள்ள பாலம். 
தமிழக அரசின் பங்கு அதற்கு வழங்க வேண்டும். அன்றைக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தா.கிருட்டிணன் மத்திய அரசிடமிருந்து அனைத்தும் வழங்கப்பட்டு வேலைகள் தொடங்க வேண்டிய நேரம். மாநில அரசிடமிருந்து அதற்கான தொகையும் அதற்கான உத்தரவுகளும்சரியாகபிறப்பிக்கப்படவில்லை. 




கிட்டத்தட்ட பத்து பதினைந்து முறை நெடுஞ்சாலை அமைச்சர் தா.கிருஷ்ணனுடைய  இல்லம்  பி.எஸ. குமாரசாமி ராஜாசாலையில் (பசுமை வழிச் சாலை-Greenways Road)இருந்த நேரம், அப்பொழுது மதிமுக செய்தி தொடர்பாளர், பலதடவை சென்றும் இதோ செய்து விடுகிறேன் என்றார், ஆனால் செய்யவில்லை. 
தலைவர் அன்றைய முதல்வர் கலைஞருடைய பார்வைக்கு இதைக் கொண்டு சென்றேன். உடனே உத்தரவு கிடைத்தது. அப்படித்தான் இந்த 3 பாலங்கள் வேலை துவங்கியது. 
இந்த பாலங்களை அமைய கோவில்பட்டி ரயில்வே நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள லெவல் கிராஸ் கேட்டு அருகே பிப் 27, 2001 இல் கால் கோள் நடந்தது. இதுதான் நான் கலந்து கடைசியான நிகழ்வு. பின் பல கசப்பான
விடயங்கள் நடந்தன. 

மூன்று மேம்பாலங்கள்,கோவில்பட்டியை பொறுத்தவரை இது ஒரு சிறப்பான விஷயம். எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் மூன்று பாலங்கள் ஒரு நகராட்சிக்குப் பெற்று தந்தது இல்லை. அந்தச் சிறப்பை வைகோ செய்தார்.
இப்பொழுது அந்தப் பாலம் பழுதடைந்து இன்றைக்கு அதைச் சீரமைக்கும் வேலைகள் நடைபெறுகின்றன. 

மற்றொரு படம்(2)கோவில்பட்டி புறவழிச் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம். இன்றைய தமிழக முதல்வர் அன்றைக்கு திறந்து வைத்த பேருந்து நிலையம். 14 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பேருந்து நிலையத்தை  சீர்திருத்த வேண்டும். இந்தப் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அமைய வேண்டும் என்பது கோவில்பட்டி மக்களின் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான நகரம்கோவில்பட்டி. தீப்பெட்டி, மில், கடலைமிட்டாய் தயாரிப்பு மற்றும் விவசாயம் என தொழில் சார்ந்த நகரம். இதனால் நாளுக்குநாள் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோவில்பட்டி நகரை நோக்கி வருவதால் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் கோவில்பட்டி நகரில் மத்தியில் அண்ணா பஸ் நிலையம் செயல்பட்டு வந்தாலும், நகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் 3.97 ஏக்கர் பரப்பளவில் 1 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த கூடுதல் பஸ் நிலையம் கடந்த 2007ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த தற்போதைய தமிழக முதல்வர் தான் திறந்து வைத்தார். கூடுதல் பஸ் நிலையத்தில் பஸ் இயக்கப்பட்ட சில மாதங்களில் நிறுத்தப்பட்டது.

வழக்கம் போல  பழைய நிலையத்தில் இருந்து தான் பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. கூடுதல் பேருந்து நிலையம் செயல்பட நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட காரணங்களினால் பேருந்து நிலையம் செயல்படாமல் இருந்தது. இடையில் பேருந்து நிலையம் பராமரிப்பு காரணமாக சுமார் 20 மாதங்கள் கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதன் பின்னர் கூடுதல் பேருந்துநிலையம்கண்டுகொள்ளப்படவில்லை.

14 ஆண்டுகளாக வெறும் காட்சி பொருளாக காட்சியளித்து வருவது மட்டுமின்றி தற்பொழுது திறந்த வெளி மதுபானக்கூடமாக மாறியுள்ளது. கூடுதல் பேருந்து நிலையம் முழுவதும் எந்த பகுதிக்கு சென்றாலும் மதுபான பாட்டில்களை எளிதில் பார்க்க முடியும்.

மேலும் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே சுவர்களும், மேற்கூரைகளும் பெயர்ந்து விழுந்து கொண்டு இருக்கிறது. மேற்கூரைகள் மரங்கள் வளர்வருவதற்கும், பறவைகள் கூடுகள் கட்டுவதற்கும் பயன்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் இருந்தாலும், அந்த வழியாக செல்லக்கூடிய அரசு, தனியார் பேருந்துகள் எதுவும் கூடுதல் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை, பேருந்து நிலையத்திற்கு வெளியே இறக்கி விட்டு செல்கின்றனர். சில அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் மையப்பகுதியில் இறக்கி விட்டு செல்லுவதால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் பயணிகள் தங்களது உடமைகளுடன் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணித்து தான் கூடுதல் பேருந்து நிலையத்திற்கு வரவேண்டியுள்ளது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என முக்கிய நகரங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள், பைபாஸ் ரைடர்கள், தனியார் ஆம்னி பேருந்து எல்லாம் கோவில்பட்டி நகருக்குள்ள வரமால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லுவதால் பயணிகள் கூடுதல் பேருந்து நிலையம் எதிரே வெயிலும், மழையிலும் வெகு நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு சர்வீஸ் பேருந்துகள் இயக்கபடாத காரணத்தினால் பயணிகள் ஆட்டோவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அது மட்டுமின்றி ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் நடந்தே ஊருக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அது மட்டுமின்றி கூடுதல் பேருந்து நிலையத்தில் கடைகள் எடுத்த வியாபாரிகள் 14 ஆண்டுகளாக பேருந்து நிலையம் என்றவாது ஒருநாள் செயல்பட்டு விடாதா என்று காத்திருக்கும் நிலையும் உள்ளது. செயல்படமால் இருக்கும் கூடுதல் பேருந்து நிலையத்தில் பராமாரிப்பு அவ்வப்போது நடைபெற்றதாக நகராட்சி புள்ளி விபரங்களும் கூறுகின்றன. கொரோனா ஊரடங்கின் போது கோவில்பட்டி தினசரி சந்தை கூடுதல் பேருந்து நிலையத்தில் செயல்பட்டது என்பது குறிப்படதக்கது.

கோவில்பட்டி நகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதாகவும், 5 நிமிடத்தில் போக கூடி இடத்திற்கு போக்குவரத்து நெருக்கடி காரணமாக அரைமணி நேரமாகிறது என்றும் இளையரசனேந்தல் சுரங்கபாலம் மூடப்பட்டுள்ளது. செண்பகவல்லியம்மன் கோவில் அருகேயுள்ள பாலம் சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், பழைய பேருந்து நிலையம் வணிக வளாகம் போன்று கட்டப்பட்டு இருப்பது மட்டுமின்றி, நெருக்கடி அதிகரிக்கும் நிலை இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்கிறார் சக்திவிநாயகம்

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கலாம். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அதிக செலவு செய்து அமைக்கப்பட்ட கூடுதல் பேருந்து நிலையத்தினை செயல்படுத்த வேண்டும். விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மட்டும் கூடுதல் பேருந்து நிலையம் வழியாக செல்கிறது. அந்த பேருந்துகள் கூட உள்ளே செல்லமால் வெளியில் பயணிகளை இறக்கி விட்டு செல்லுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. கூடுதல் பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடரமாக மாறி உள்ளது.

போலீசாரும் அப்பகுதியில் ரோந்து பணிக்கு செல்வதில்லை என்பதால் இரவு நேரங்களில்  வரும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. 2 கோடி ரூபாய் வரை செலவு செய்து பேருந்து நிலையம் அமைத்த நிர்வாகம் அதனை திறந்த வெளிபாராக அமைத்து இருக்கலாம். பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் பேருந்து நிலையத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் தமிழரசன்

கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு கடந்த 2007ம் ஆண்டு கூடுதல் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 14 ஆண்டுகளில் 20மாதங்கள் தான்செயல்பட்டுஉள்ளது.மதுரை,நெல்லை, சென்னை, பாண்டிசேரி உள்ளிட்ட ஊர்களுக்கு மக்கள் இங்கு வந்து தான் செல்கின்றனர்.

#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-07-2021.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...