Thursday, July 22, 2021

#அரசியிலில்_ifs_and_buts_இன்றைக்கு_கிடையாது.

#அரசியிலில்_ifs_and_buts_இன்றைக்கு_கிடையாது.
——————————————————
அரசியல் என்பது எட்டு திசைகளுடன் தொடர்புடையது மட்டுமல்ல அது நாற்பது திசைகள். நானூறு திசைகளுடன் தொடர்புடையது. ஆனால் இன்றைய நிலையில் அது இங்கு உணமை இல்லை.பொது வாழ்வில் தற்போது ifs and buts என்ற விடயங்கள் எல்லாம் கிடையாது. இந்த தளத்தில் Life is a like a play(Shakespeare)

இது எதனால்? எப்படி? ஏன்? மாறியது என்பது யாருக்குமே தெரியாது.  காற்று அடிக்கும். சுவாசித்துக் கொள்ள முடியும்.  புழுக்கமாக இருக்கும். பொந்துக்குள் அமைதியாக இருக்க வேண்டும்.  இப்படித்தான் அரசியல் பயணம் இருக்கின்றது. இனி வரும் காலங்களில் கூட இப்படித்தான் இருக்கும். உழைப்பு,
களப்பணிகள்,புரிதல், நேர்மை எல்லாம்
கணக்கீடு கிடையாது. இது முக்கியமல்ல
இன்று. இங்கு தகுதியே தடை.போகிற போக்கில்  உறங்குவனுக்கு (யார் என்று தெரியா நபருக்கு) மகுடம் சூட்டும் காலம் இது.

இதையும் புறம் தள்ளி,இன்னும் எந்த எதிர்பார்ப்பும்இல்லாமல்அரசியல்களத்
தில் சிலர் உழைத்து கொண்டுள்ளனர்.

இப்படி ஏதாவது ஓர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.  பாறைகளைக்கூடச் சிறு உளி பிளக்க வாய்ப்புண்டு என்பதனை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.பலா பலனில் மீது பற்று வைக்காமல் கடமையைச் செய்தேன் என்ற நிலைப்பாட்டில் இருங்கள்,

வெற்று அரட்டைகளும், குப்பை ஆசைகளும் உங்களுக்குப் பெரிதாக தெரியும்.அதை ஆழமாக திடமாக சிந்தித்தால்  உங்களுக்கே வேடிக்கையாக படும். 
ஆனாலும்,நம்மை யாராவது தள்ளி விட்டாள்....!
நிதானமாக நிமிர்ந்து பாருங்கள்....!
ஒரு மாயை வெற்றி சிறப்பாக நம்மை வரவேற்கும் ....! கதவு திறக்கும். வழி தெரியும் என்ற நம்பிக்கையில் பயணம் 
அசதி இல்லாமல் தொடர வேண்டும்.

கைபேசி  பயன்படுத்தும்  கூட்டம் அரசியல் சக்தியைத் தீர்மானிக்கப் போகும் காலகட்டம் தான் இங்கே பெரிய பல மாறுதல்களை உருவாக்கப் போகின்றதா?

அவர்களுக்குப் பழைய வரலாறு என்பது குப்பை.  தியாகம் என்பது  வெற்று வேலை. அவர்களுக்கு எளிதான சுகமாக வாழ்க்கை வேண்டும். அதனை யார் தருகின்றார்களே அவர்கள் பின்னால்அணிவகுப்பார்கள்.இப்படித்
தான் இனி வரும் காலம்.அதையும்
கடக்க வேண்டும்.

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.  எந்தச் செயலும் மேலேறிக் கொண்டேயிருக்காது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஆதரித்தாலும், ஆதரிக்க மறுத்தாலும் இயற்கை சூட்சமத்தில் காலத்தை உங்களால் மாற்ற முடியாது. அது அதன் போக்கிலேயே அளவிட்டு நகர்ந்து கொண்டேயிருக்கும். கால தேச வர்தமானம்  என்று போக்குகள், நேர்மையின் நிலைப்பாடு, சூழ்நிலைக்கு ஏற்றநியாயங்கள்,அடையாளங்கள்,
முகங்கள் மாறும் என்பது ஊழ்,இயற்கையின் விதி. மாற்றம் என்பது மட்டுமே மாறாத விதி . எல்லாவற்றுக்கும் இறுதி என்று ஒன்று உண்டு.

‘Cowards die many times before their deaths; the valiant never taste of death but once.’
(Julius Caesar Act 2, Scene 2)

 ‘Full fathom five thy father‘If you prick us, do we not bleed? If you tickle us, do we not laugh? If you poison us, do we not die? And if you wrong us, shall we not revenge?’
(The Merchant of Venice Act 3, Scene 1)

‘Beware the Ides of March.‘
(Julius Caesar Act 1, Scene 2)
-Shakespeare

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
22-7-2021.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...