Friday, June 26, 2026

Tnbjp State President Sri Nayinar Nagendiran visit to stanley hospital to see 3years girl child body.

 Tnbjp State President Sri Nayinar Nagendiran visit to stanley hospital to see 3years girl child body.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வெறும் 3 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் மனதை உலுக்கி, பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தினம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டிருந்த அந்த பிஞ்சுக் குழந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அஅவரகளுடன் சென்றிருந்தோம். அப்போது, துயரத்தில் வாடும் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், இந்த மனிதத்தன்மையற்ற கொடூரச் செயலை அரங்கேற்றிய குற்றவாளிகள் மீது சட்டத்தின் உச்சபட்ச தண்டனை உறுதி செய்யப்படும் வரை தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராடும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக என்றும் நிற்கும் என்றும் உறுதியளித்தோம்.




No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்