Monday, April 29, 2019

கோவில்பட்டி குடிநீர் திட்டத்திற்கு இரண்டாவது பைப் லைன்....



கோவில்பட்டி குடிநீர் திட்டத்திற்கு இரண்டாவது பைப் லைன்....
-----------------------------------------------------------------------

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்று இளவேளங்கால் கிராமத்திற்கு சென்றோம்.
கோவில்பட்டி குடிநீர் திட்டத்திற்கு இரண்டாவது பைப் லைன் அமைத்து அங்கு குடிநீர் நீரேற்று நிலையம் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் இவ்வளவு பெரிய கட்டுமானம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றால் எங்களுக்கு ஓர் சொட்டு தண்ணீர் கிடைக்க போவதில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.கழக ஆட்சி வந்தவுடன் பிரச்சினையை தீர்க்க ப்படும் என்றோம்.
தலைவர் கலைஞரின் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில், தலைவர் எம்.கே.எஸ். அவர்கள் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது இந்த கோவில்பட்டி இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கீடும் அப்போதே செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டில் திமுக ஆட்சி நிறைவு பெற்ற நேரம் அதிமுக ஆட்சிக்கு வந்து இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. இது தொடர்பாக ஒரு பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தபின், தற்போது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது போல திமுகவின் திட்டத்தை செயல்படுகிறார்கள் என்பது செய்தியாகும்.
Image may contain: 2 people, outdoor
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-04-2019

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...