Saturday, April 6, 2019

தேர்தல்

இன்று(5.04.2019) நாடாளுமன்ற கழக வேட்பாளர் #கவிஞர்கனிமொழியை
ஆதரித்து வாக்கு சேகரிக்க வள்ளி நாயக புரம்,உருளைகுடி,பீக்கிளிபட்டி, பணப்பட்டி, அய்யாகோட்டூர், வெங்கடாசலபுரம், மீனாட்சிபுரம், மலைப்பட்டி,வீரபட்டி,முத்தலாபுரம்,
பிதப்புரம்,சுரைக்காபட்டி,  ஆகிய  கிராமங்களில் மக்களைச் சந்தித்து ஆதரவு  திரட்டினோம்.

இதில்   பிதப்புரம் கிராமத்தின்  சிறப்பு என்னவென்றால்  முண்டாசுக்கவி  பாரதியாரின்  தந்தையார் சின்னச்சாமி ஐயர் தன்  மகன்  பாரதியாருக்காக ஒரு  நூற்பாலைஅமைத்தார்.அதன்  இடிபாடுகள்  இன்னும் அடிச்சுவடாக அந்தக்  கிராமத்தில் இன்றும்  இருக்கிறது. இதன்  நினைவாகத்தான்  எட்டையபுரத்தில்  பாரதி நூற்பாலை  அமைந்தது.









  வாக்கு  சேகரிக்க உடன் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் எல்.இராதகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன்,
க.அண்ணாதுரை,டி.ஆர்.குமார்,ஜோதிமுத்து,ஜெயராமன்,வழக்கறிஞர்.குரு செல்லப்பா,டாக்டர்.சௌந்திரராஜன்,
மணி,செல்வம் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

#ksrpost

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
05-04-2019


No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...