Saturday, April 27, 2019

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் வேட்பாளர் சண்முகய்யாவுக்கு ஆதரவு திரட்டுகிறேன்.

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் வேட்பாளர் சண்முகய்யாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு மற்றும் மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் முழு மூச்சாக பணியில் உள்ளனர்.

இன்று (27-4-2019) மலைப்பட்டி, பரிவிளிக்கோட்டை, கொல்லங்கிணறு, ஒட்டநத்தம், கொத்தாளி போன்ற கிராமங்களில் மக்களை சந்தித்து தேர்தல் அடிப்படை களப்பணிகளை கவனித்தும் வாக்காளர்களின் ஆதரவையும் திரட்டினோம். பரிவிளிக்கோட்டை ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இருந்தது. அந்த பயிற்சிக் கூடம் மூடப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. குருவிகுளம், வானரமுட்டி, சண்முகரங்காபுரம் என ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி அதே காலத்தில் மூடப்பட்டன.

கொல்லங்கிணறில் நீண்ட காலத்திற்கு பிறகு சகோதரர் பிரச்சார கணேசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோவில்பட்டி அரசியல் களத்தில் ஒரு காலத்தில் முக்கியப் புள்ளியாக 2000 வரை திகழ்ந்தவர். கிராமத்தில் அமைதியாக விவசாயம் பார்த்து கொண்டுள்ளார். அவரைப்பார்த்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
உடன் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, ப.மு.பாண்டியன், க.அண்ணாதுரை, கடம்பூர் ராகவன், டி.ஆர்,குமார், பிரச்சார கணேசன்,மணி மற்றும் கழகத் தோழர்கள் வந்தனர்.

#ஒட்டப்பிடாரம்_இடைத்தேர்தல்
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-04-2019.
Image may contain: 8 people, people standing and outdoor
Image may contain: 5 people, people standing
Image may contain: 6 people, people standing and outdoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 2 people, people standing, night and outdoor
Image may contain: 2 people, people standing
Image may contain: 2 people, people standing

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...