Friday, July 16, 2021

#KPlan #Kamarajar_கே_பிளான்

#KPlan #Kamarajar_கே_பிளான்
———————————————————
சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக 1962ஆம் ஆண்டு பதவி ஏற்ற காமராசர், அடுத்த ஆண்டே தானாக முன்வந்து பதவி விலகினார். அதற்கு காரணம், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளிலிருந்து விலகி கட்சி பணிகளுக்கு  செல்ல வேண்டும். இது காமராசரால் முன்மொழியப்பட்ட ‘K Plan’ என்ற திட்டமாகும். இதனை ஆதரித்துப் பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலகினர். இத்திட்டத்தினைக் குறித்த சிற்றேட்டை  ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக் (ஒடிசா முதலமைச்சர் நவீன்  பட்நாயகின் தந்தை )எழுதி வெளியிட்டார். இச்சிற்றேடு இந்தியாவில்  சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பாதுகாத்து வருகிறது.
#KPlan
#Kamarajar
#ksrpost
15-7-2021


No comments:

Post a Comment