Thursday, January 2, 2020

ஓமந்தூராரின் சாதுர்யம்.

நேற்று ஓமாந்தூராரை பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தேன். அதை படித்துவிட்டு சிலர் பாராட்டினார்கள். அவர் யாரென்றும் அடையாளம் தெரியாமலும் என்னிடம் கேட்கவும் செய்தார்கள். அப்படி கேட்டது எனக்கே ஏற்பட்ட அவமானமாக கருதுகிறேன். சமூக குற்றமாகவும் கருதுகிறேன். 
Image result for ஓமந்தூரார்"அப்படி கேட்டவர்களுக்கு விகடனுடைய இணைய தளத்தில் திரு. திருமாவேலன் பேசிய காணொளி காட்சியினை அந்த பெரிய உள்ளங்களின் பார்வைக்கு வைக்கின்றேன். இதையாவது ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி பார்க்கவும் வேண்டுகின்றேன். 
ஓமாந்தூராரைப் போன்ற மனிதர்களை பொதுவாழ்வில் காண்பது அரிது. அப்படிப்பட்ட பொதுவாழ்வில் ஈடுபட்ட நல்ல உள்ளங்களை துரோகங்களால் அழிக்கப்படலாம். வரலாற்றில் சிலர் அவர்கள் பெயரை என்றும் உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். அதை தடுக்க முடியாது.
#ஓமாந்தூரார்
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.12.2019

ஓமாந்தூராரின் சாதுர்யம் குறித்து அறிய இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment

feb 19