Friday, October 30, 2015

உலகநாடுகளில் தமிழர்கள் தேர்தல் தொடர்வெற்றி.



ஆஸ்திரேலியா மோர்லண்ட் நகர முதல்வராக, ஈழத்தமிழ்ச் சகோதரி, சமந்தா ரத்தினம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கிரீன் கட்சியின் சார்பில் தெற்கு வட்டாரத்தின் உறுப்பினரான இவர் வெற்றிபெற்றுள்ளார். அன்பு நண்பர் மாணிக்கவாசகம் மெல்பர்னிலிருந்து இந்த மகிழ்ச்சியான செய்தியினைச் சொன்னார். அவருக்கு வாழ்த்துகள்.

1983 இனக்கலவரத்தின் போது ஆறு வயதுச் சிறுமியாக இருந்த சமந்தா ரத்தினம் ஐரோப்பா, கனடா நாடுகளில் வசித்து 1989ம் ஆண்டு ஆஸ்த்திரேலியாவில் குடியேறினார். தொழிலாளர் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்த மோர்லண்ட் நகரத்தில் கிரீன் கட்சியின் உறுப்பினரான சமந்தா ரத்தினம் வெற்றிபெற்றிருப்பது. அங்குள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே கனடாவில் சகோதரி ராதிகா சிற்பேசன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றிருந்தார். சமீபத்தில் நார்வே தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக ஈழத்தமிழ் சகோதரி ஹம்சாயினி குணரத்தினமும், கனடா நாட்டின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்காபரோ ரூச்பார்க்கில் ஈழத்தமிழரான வழக்கறிஞர் ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் சார்பிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

உலகெங்கும் சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தமிழர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பேற்று வருகின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களுடைய பங்களிப்பால் தமிழர்களுக்குப் பெருமை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட நியாயமான போர்குணத்தால் தமிழர்கள் யார் என்று அறியமுற்பட்டு உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தனர். உலக அளவில் தேர்தல்களில் தமிழர்கள் மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெறுவது நமக்குத்தானே பெருமை.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-10-2015.

#KSR_Posts #KsRadhakrishnan # #Anandasagaree, #KhamshajinyGunaratnam, #SamanthaRatnam


No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...